தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணபிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணபிக்க அவகாசம் நீட்டிப்பு
கால் அவகாசம் நீட்டிப்பு 
தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘2023-24ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி தகுதி படிப்புதவி திட்ட தேர்வுக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்சமயம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 27ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story