சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

கோப்பு படம்


சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர். தமிழ்நாடு அரசால் எடுக்கப் பட்ட தொடர் முயற்சியால் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் இதுவரை சம்பா பயிர் காப்பீடு செய்யாத திருவண்ணாமலை மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள் வருகிற 22-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம் என திருவண் ணாமலைவேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவிற்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story