பெண் வேடத்தில் லாரி ஓட்டுனரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்!

பெண் வேடத்தில் லாரி ஓட்டுனரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்!

கோவையில் பெண் வேடத்தில் லாரி ஓட்டுனரை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவையில் பெண் வேடத்தில் லாரி ஓட்டுனரை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபு (32) என்பவர் கடந்த வாரம் கேரளாவில் இருந்து லாரியில் சிலிகா மணல் ஏற்றி வந்தார்.அப்போது நவக்கரை அருகே வந்தபோது லாரியை பெண் வேடம் அணிந்த ஒருவர் நிறுத்தி தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து சாலையில் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு பெண் வேடமணிந்த அணிந்த நபருடன் லாரி ஓட்டுனர் சென்றபோது புதர்களின் நடுவே மறைந்திருந்த இளைஞர்கள் அவரை தாக்கியதுடன் கத்தி முனையில் ரூ.30,000 பறித்து சென்றனர்.

இதுகுறித்து பிரபு கே.ஜி சாவடி போலீசில் புகார் அளித்து இருந்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் சபரீஷ் (25), குரு பிரகாஷ் (21), நாகராஜ் (26), சூரியா (18), சிவா (24) ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story