கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறிப்பு - 2 ரவுடிகள் கைது

கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறிப்பு - 2 ரவுடிகள் கைது

பைல் படம் 

வேலூரில் கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் கஸ்பா நேருநகரை சேர்ந்தவர் ராஜா (33). இவர் வேலூர் பழைய மீன்மார்க்கெட் அருகே சாலையோரம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் ராஜாவின் கடைக்கு வந்த 2 மர்மநபர்கள் மாதம்தோறும் எங்களுக்கு ரூ.1,000 மாமூல் கட்டாயம் தர வேண்டும். இல்லையென்றால் இங்கு கடை வைக்க முடியாது என்று கூறி உள்ளனர். பின்னர் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1,500-ஐ பறித்து சென்றனர்.

இதுகுறித்து ராஜா வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையாயத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மன் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் சின்னா என்கிற சந்திரன் (38), திருமலை (30) ஆகியோர் வியாபாரியிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரவுடிகள் சந்திரன், திருமலை ஆகியோர் மீது தலா 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story