ஹோட்டல் உரிமையாளரிடம் நகை பணம் பறிப்பு

ஹோட்டல் உரிமையாளரிடம் நகை பணம் பறிப்பு

நகை பணம் பறிப்பு

ஆரல்வாய்மொழி அருகே ஹோட்டல் உரிமையாளரிடம் நகை பணம் பறிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள குலசேகரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (29). இவர் ஆரல்வாய்மொழி எம் ஜி ஆர் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். சம்பவ தினம் செண்பகராமன்புதூர் - தோவாளை கால்வாய் கரையோரம் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மஞ்சள் நிற மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமாரை தடுத்து நிறுத்தி மிரட்டி அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், மற்றும் ₹9,500, 5 கிராம் எடையுள்ள மோதிரம் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக அருண்குமார் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story