குளச்சல் அருகே பெட்ரோல் பங்கில் பணம்  பறிப்பு: 3பேர் கைது

குளச்சல் அருகே பெட்ரோல் பங்கில் பணம்  பறிப்பு: 3பேர் கைது
பைல் படம்
குளச்சல் அருகே பெட்ரோல் பங்கில் பணம்  பறித்த விவகாரத்தில் 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள திக்கணம்கோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு கடந்த 8-ம் தேதி இரவு 3 இளைஞர்கள் பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். பெட்ரோல் போட்டவுடன் ஒரு இளைஞர் ஊழியரை தாக்கி கீழே தள்ளிவிட,

மற்றொருவர் கல்லா பெட்டியில் இருந்து பணத்தை எடுத்த நிலையில் மூவரும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த நவீன்,

பிரவீன் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பெட்ரோல் பங்க் கொள்ளையின் போது அவர்கள் ஓட்டி வந்த பைக், புங்கறை பகுதியில் மகேஷ் என்பவரிட 6 திருடப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக இளைஞர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் சில இளைஞர்கள், கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story