வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு

கத்தியை காட்டி பணம் பறிப்பு 

சேலத்தில் வாலிபரிடம் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ஜீவா (22). இவர் நேற்று மதியம் கிச்சிப்பாளையம் குறிஞ்சிநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் ஜீவாவை ஆபாசமாக சேலத்தில் நடந்து சென்ற ஜீவாவை ஆபாசமாக பேசியதுடன், திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் ஜீவா புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்தியைக்காட்டி பணம் பறித்த பச்சப்பட்டி ஆறுமுக நகரைச்சேர்ந்த சந்தோஷ்குமார் (27) மற்றும் சதீஸ்குமார் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story