கண்தானம்
ஆத்தூர், ஆதவன் அரிமா சங்கம் சார்பில் மறைந்த ரவிக்குமார் என்பவரின் கண்கள் தானமாக பெறப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கம் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள் , ரத்ததான முகாம் இயற்கையை போற்றும் வகையில் மரக்கன்றுகள் , என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்
இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் ரவிக்குமார் என்பவர் இன்று காலமானார் ஆதவன் அரிமா சங்கத்தின் பட்டய தலைவர், சங்கத்தின் செயலாளர் அரிமா சந்திரன் அரிமா கருப்பண்ணன் அரிமா முகிலன் உள்ளிட்ட அரிமாக்கள் அவரது குடும்பத்தினர் ஒப்புதலோடு அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது சேவை சங்கத்தின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
Tags
Next Story