கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

 கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் திருக்கோவிலுார், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் திருக்கோவிலுார், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வியாபாரிகள் சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ரோட்டரி கிளப் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கோதம்சந்த் முகாமை துவக்கி வைத்தனர். இந்திய கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், வழக்கறிஞர் உமா சங்கர், கல்லந்தல் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கோவை சங்கரா கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். 42 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் சவுந்தரராஜன், முத்துகுமாரசாமி, தேவிபாலமுருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story