நாகப்பட்டினம் : கண் பரிசோதனை முகாம்

நாகப்பட்டினம் : கண் பரிசோதனை  முகாம்
கண் பரிசோதனை முகாம்
நாகை மாவட்டம், சேஷமூலையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சேஷமூலை ஊராட்சியில் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம்,விபிஎன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.இ

ந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது.அதேபோல் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பரிசோதனைகளும் நடைபெற்றது.இந்த முகாமில் போலகம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் அருள்ராணி நன்றி கூறினார்.

Tags

Next Story