மேல்மலையனூர் அருகே கண் சிகிச்சை முகாம்

மேல்மலையனூர் அருகே கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம் 

மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தில் ஊராட்சி மன்றம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம், புதுச்சேரி தனியார் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி, கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கதிர்வேலு நன்றி கூறினார்.

Tags

Next Story