இராசிபுரம் அருகே கண் சிகிச்சை முகாம்

இராசிபுரம் அருகே கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

இராசிபுரம் அருகே கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இரா.பட்டணம் ஊதன் ரங்கசாமியின் மனைவி ர.ராமயம்மாள் முதலாம் ஆண்டு நினைவாக சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் முழு கண் சிகிச்சை முகாம் இரா. பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனையும், மருத்துவரின் ஆலோசனையும் பெற்று சென்றனர். மேலும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள் விழிலென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து இலவசமாகவும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாகவும் செய்யப்படும் என உறுதியளித்தனர்.

Tags

Next Story