முன்கூட்டியே வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற வசதி

முன்கூட்டியே வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற வசதி

திருக்கோவிலுார் நகராட்சி

முன்கூட்டியே வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற வசதி.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என திருக்கோவிலுார் நகராட்சி ஆணையர் கீதா தெரிவித்துள்ளார். இது குறித்து திருக்கோவிலுார் நகராட்சி ஆணையர் கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. நடப்பு நிதியாண்டு 2024 - 25ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, சொத்தின் உரிமையாளர்கள் வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 5000 வரை பயன்பெற முடியும். இதன்படி திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் உள்ள சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி ஊக்க தொகையை பெறுவதற்கு வசதியாக நகராட்சி அலுவலகத்தில் கணினி வசூல் மையத்தில் பொதுமக்கள் வரியை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும், திருக்கோவிலூர் நகராட்சியை தேர்வு செய்து, சொத்து வரி தொகையை உடனடியாக செலுத்த சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆணையாளர் கீதாவின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story