தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக வரும் போலி நிறுவனங்கள்

தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக வரும் போலி நிறுவனங்கள்

தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக வரும் போலி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கூறியுள்ளார்.


தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக வரும் போலி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கூறியுள்ளார்.

தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக வரும் போலி நிறுவனங்கள் மீது எச்சரிக்கையாக இருக்க விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனம் என கூறிக்கொண்டு போலியான பட்டியல்கள், போலியான லெட்டர்பேடு பயன்படுத்தி, தென்னை மரங்களுக்கு உரம் வைத்து கொடுப்பதாகக் கூறிக்கொண்டு, பல்வேறு முறைகேடுகளில் ஒருசிலர் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசிடம் அனுமதி பெறாமல், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனம் எனக் கூறிக்கொண்டு, சில தனியார் நிறுவனங்கள் செயல்படுவதாக தகவல் பெறப்பட்டுள்ளது.

இம்மாதிரியான போலி நிறுவனங்கள், வசதி படைத்த பெரிய தென்னை விவசாயிகளை தொடர்பு கொண்டு, தாங்கள் வேளாண்மைத்துறையின் ஒப்புதல் பெற்ற துணை நிறுவனம் என அறிமுகப்படுத்திக்கொண்டு தென்னை மரங்களுக்கு உரம் வைப்பதாக கூறி பணம் பெற்று வருகிறார்கள். சில இடங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், விவசாயிகளின் மனநிலையை புரிந்துகொண்டு விளைநிலங்களுக்கு கம்பிவேலி அமைத்து தருவதாக கூறி, அதற்கு முழுமானியம் பெற ரூ.1,200/- விண்ணப்பக்கட்டணம் கட்ட வேண்டும் எனவும், இதற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.1,20,000/- மானியம் பெற்றுத்தருவதாகவும் விண்ணப்பம் கொடுத்து, வசூல் செய்வதாக தெரியவருகிறது.

எனவே, இதுபோன்ற போலி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை எனவும், அரசுத்துறையின் பெயரை இவர்கள் போலியாக பயன்படுத்தி வருவதும் தெரியவருகிறது. இதுபோன்ற போலி நிறுவனங்களை கட்டுப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுபோன்று, சந்தேகப்படும்படியான நபர்கள் தங்களை அணுகினால், அவர்களின் பெயர், தொலைபேசி எண் விவரங்களை தெரிந்துகொண்டு, அவர்களின் புகைப்படத்தையும் கைபேசியில் பதிவு செய்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திடலாம்" என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story