திருக்கோவிலூர் அருகே போலி டாக்டர் கைது

திருக்கோவிலூர் அருகே போலி டாக்டர் கைது

இளைய ராஜா

திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தலில் உள்ள மருந்துக்கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி ராஜவிநாயகம் தலைமையிலான குழுவினர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் திருப்பாலப்பந்தல் கிராமத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள மருந்துக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மருந்துக்கடை நடத்தி வரும் பரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளைய ராஜா(வயது 33) என்பவர் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே தன்னை ஒரு டாக்டர் என கூறி அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி ராஜவிநாயகம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார், போலி டாக்டரான இளையராஜாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story