திருப்பூரில் போலியான வேலை வாய்ப்பு விளம்பரம்

திருப்பூரில் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
திருப்பூரில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்பு. போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். திருப்பூரில் பின்னலாடை துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வெளியூரிலிருந்து வரும் நபர்களை பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் அங்கீகாரமற்ற ஏஜெண்டுகள் ஏமாற்றி வேலைக்கு முன்னதாக பணம் செலுத்த வேண்டும் என பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடுவதால் அது போன்ற நபர்களிடமிருந்து விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும், போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் திருப்பூரில் எந்த நிறுவனமும் பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை சேர்ப்பதில்லை எனவும் சில நிறுவனங்கள் பணியாளர்களை சேர்த்து அவர்கள் மீது நம்பிக்கை வந்தால் முன் பணம் கொடுத்து தொழிலாளர்களுக்கு உதவுவது நடைபெற்று வருகிறது என வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story