போலி மதுபானம் விற்பனை

போலி மதுபானம் விற்பனை

போலி மது விற்பனை 

திண்டுக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதக்கடைகளை மூட எஸ் பி உத்தரவிட்டு உள்ளார். மீறி மது பானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து மதுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தடுக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோபால்பட்டியில் இயங்கி வரும் தனியார் பஞ்சாபி தாபாவில் நேற்று டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் விடுமுறை விட்டுள்ள நிலையில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story