வாகனங்களில் போலி போலீஸ்,பிரஸ் ஸ்டிக்கர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாகனங்களில் போலி போலீஸ்,பிரஸ் ஸ்டிக்கர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்

தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ். பிரஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு உலா வருவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ், பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு உலா வருவதாகவும் அதை கண்டறிந்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story