கரூர் அருகே குடும்பத்தகராறு: வாலிபர் தற்கொலை

கரூர் அருகே குடும்பத்தகராறு: வாலிபர் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

கரூர் அருகே மனைவியுடன் குடும்பத்தகராறு காரணமாக மனவிரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தெற்கு கோடந்தூர், மூலத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சிவசுப்ரமணி வயது 35. இவரது மனைவி தானியா வயது 30. சிவசுப்பிரமணிக்கு அண்மை காலமாக மது பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சிவசுப்பிரமணியன் ஜனவரி 21ஆம் தேதி மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்த தானியா தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து தென்னிலை காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த சிவசுப்பிரமணி உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர். .

Tags

Next Story