சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சனை: வாலிபர் வெட்டி கொலை

சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சனை: வாலிபர் வெட்டி கொலை

கொலை செய்யப்பட்ட வாலிபர்

சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியதுரை கோவை மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பெரியதுரையின் தம்பி அருண்குமார் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தாக கூறப்படுகிறது

அது சம்பந்தமாக அவரது தம்பியிடம் பேசி முடிவெடுப்போம் என கூறிய அருண்குமார் பெரியதுரையின் தம்பியை வரச் சொல்லி இருக்கிறேன் நீயும் வா என பெரிய துரையை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அருண்குமார் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கள்ளத்தி குளம் அருகே கிடந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் அருண்குமாரை மீட்ட காவல்துறையினர் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story