ஶ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்சனை: கணவன் வெட்டி கொலை

ஶ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்சனை: கணவன் வெட்டி கொலை

காவல் நிலையம்

ஶ்ரீவில்லிபுத்தூரில் கணவன்- மனைவியை சேர்த்து வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை சேர்த்து வைப்பதற்காக ஏற்பட்ட வாய் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவை சேர்ந்தவர் பாண்டி இவரும் இவர் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று இரவு பாண்டி தனது தந்தையான பரமசிவத்திடம் தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சுமுகமாக பேசி தங்களை சேர்த்து வைக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பரமசிவத்தின் உறவினர் ஏமராஜன் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இறுதியில் பாண்டிக்கும் ஏமராஜனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஏமராஜன் தனது வீட்டில் வைத்திருந்த அறிவாளை எடுத்து வந்து பாண்டியை தலை,கால், தோள்பட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த பாண்டியை உறவினர்கள் உதவியோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மேல் சிகிச்சைக்காக அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக பாண்டி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டி ஏற்கவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து பாண்டியின் தந்தை ஏமாராஜன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் கொலை குற்றத்திற்காக ஏமராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரச்சனை தீர்க்க வந்த உறவினரே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story