சேலம் சூரமங்கலத்தில் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் தற்கொலை

சேலம் சூரமங்கலத்தில் கள்ளக்காதலியுடன் குடும்பம்  நடத்திய வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

சேலம் செட்டிச்சாவடி தாழையூத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (37) . இவருக்கு மதுபாலா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சூரமங்கலம் என்ஜினீயரிங் காலனி பகுதியில் உள்ள ஒரு லாரி புக்கிங் ஆபிசில் சந்திரசேகரன் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் லாரி புக்கிங் ஆபிசின் உரிமையாளர் இறந்து விட்டார். இதனையடுத்து சந்திரசேகரன் லாரி புக்கிங் ஆபிஸ் உரிமையாளரின் மகளுடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கள்ளகாதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது . இதில் மனைவியை விவாகரத்து பெற்று விட்டு அவரை திருமணம் செய்வதா, அல்லது இப்படியே தொடர்வதா ? என்பது குறித்து சந்திரசேகரன் மன குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சந்திரசேகரன் கள்ளகாதலியுடன் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த கள்ளக்காதலி மற்றும் மனைவி குழந்தைகள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story