மங்கலம்பேட்டையில் கடைசி நாளாக விடையாற்றி உற்சவம்

X
சுவாமி ஊர்வலம்
மங்கலம்பேட்டையில் கடைசி நாளாக விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடைசி நாள் விடையாற்றி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
