நித்திரவிளை அருகே குளத்தில் செத்து மிதந்த வளர்ப்பு மீன்கள்.

நித்திரவிளை அருகே குளத்தில் செத்து மிதந்த வளர்ப்பு மீன்கள்.
செத்து மிதந்த மீன்கள்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அம்மந்தலை பகுதியை சார்ந்தவர் தேவராஜ் (60), இவரது மகன் ரெஜின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் நித்திரவிளை அருகே கொல்லால் பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள பாறை உடைத்த குழியில் ரெஜின்ராஜ் வளர்ப்பு மீன்கள் வளர்த்து வந்தார். இந்த குளத்தை சுற்றி கம்பியால் ஆன வேலியும், மேல் பகுதியில் வலையும் போட்டுள்ளார். நேற்று மாலை மீன்களுக்கு தீனி போட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம் போல் இன்று காலை மீன்களுக்கு தீனி போட சென்ற போது சுமார் இருநூறுக்கும் அதிகமான மீன்கள் செத்து மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் தேவராஜ் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் விஷ உணவுகளை வீசி சென்றதில் மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது. மேலும் இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story