பூச்சி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

ஆத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகே தலைப்பண்ணையூா் பூந்தோட்டத்தை சோ்ந்தவா் பெருமாள் மகன் கண்ணன் (50). விவசாயியான இவருக்கு மனைவி வேல்கனி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இதில் மூத்த மகன் மாரிச்செல்வம் தனக்கு வீடு கட்டித்தரும்படி கண்ணனிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் மனஉளைச்சலில் இருந்த கண்ணன், நேற்று வாழைத் தோட்டத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளாா். பின்னா் அவா், முருகப்பெருமாள் என்பவரது வாழைத்தோட்டம் அருகே வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஆத்தூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story