பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

காவல் நிலையம் 

புவனகிரி அருகே பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மருதூர் அடுத்த மஞ்சக்கொல்லை வள்ளலார் நகரை சேர்ந்த ஜெயராமன் விவசாயி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13 ஆம் தேதி திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story