வயிற்றுவலி காரணமாக விவசாயி துாக்கிட்டு தற்கொலை

வயிற்றுவலி காரணமாக விவசாயி துாக்கிட்டு தற்கொலை

விவசாயி துாக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம்,காவாத்துார் கிராமத்தில் விவசாயியாக வசித்து வந்தவர் தேவராஜ் (வயது 60). இவர் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்றில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவரை அணுகியும், மருந்துகள் எடுத்துக் கொண்டும் வயிற்று வலி தீராமல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 1. 00 மணியளவில் வயிற்றில் ஏற்பட்ட அதீத வலியை தாங்க முடியாமல் தேவராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறின் மூலமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story