விவசாயி விஷம் அருந்தி தற்கொலை!

X
தற்கொலை
விராலிமலை ஒன்றியத்தில் விவசாயி விஷம் அருந்தி தற்கொலை - மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
விராலிமலை ஒன்றியம் மண்டையூர் நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி யாண்டி(32). இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த பழனியாண்டி விஷம் குடித்தார். வயலில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
