சிவந்திபட்டியில் விஷம் குடித்த விவசாயி மரணம்

சிவந்திபட்டியில் விஷம் குடித்த விவசாயி மரணம்

விவசாயி பலி

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டியில் விஷம் குடித்த விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டியை சேர்ந்த மாசானம் மகன் நாகராஜன் (38). விவசாயியான இவருக்கு உடல்நலம் சரியில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் அவர் நேற்று காலையில் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார்.

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story