திண்டிவனத்தில் கார் மோதி விவசாயி மரணம்

திண்டிவனத்தில் கார் மோதி விவசாயி மரணம்
பலியானவர்
விழுப்புரம் மாவட்டம் , கோனேரிகுப்பம் பகுதியில் கார் மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 56). விவசாயி. இவர் தனது சைக்கிளில் ஒலக்கூரில் இருந்து கோனேரி குப்பம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் கார் சின்னதுரை ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்ன துரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சையத் சிராஜுதன் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story