திமுக பிரமுகர் கார் மோதி விவசாயி பலி

திமுக பிரமுகர் கார் மோதி விவசாயி பலி

விபத்து 

திமுக பிரமுகரின் ஜீப் மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டியைச் சார்ந்தவர் சின்னச்சாமி (73) இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் விவசாயத் தொழில் செய்து வரும் இவர் இன்று சாலை காளியம்மன் கோவில் பங்காரு சாமி குளம் அருகில் உள்ள தனது தோட்டத்திற்கு அணைக்கரை பட்டியில் உள்ள வீட்டிலிருந்து தோட்ட வேலை செய்பவர்களுக்கு உரிய பொருள்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது தேனியில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி வேகமாக வந்த பொலிரோ ஜீப் மோதி சுமார் 20 அடி தூரம் இழுத்துச் சென்ற நிலையில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக காவல்துறையினர் இறந்த சின்னச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்ததில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த மனோஜ் என்பவர் வாகனம் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டி வந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story