மாரடைப்பால் விவசாயி மரணம்

மாரடைப்பால் விவசாயி மரணம்

விவசாயி மரணம் 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூடத்தின் போது விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அருகே உள்ள செரியலுார் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நடந்தது. கும்பாபிஷேக வரவு செலவு கணக்கு மற்றும் முதல் மரியாதை தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த சமூ கத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொ டர்பாக ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பெரியநாயகி தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், ஒரு தரப்பின் சார்பில் கறம்பக்காட்டை சேர்ந்த விவசாயி துரைமாணிக்கம் (85)கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அவரை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைமாணிக்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சமாதான கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story