சேலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி பலி

சேலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி பலி

 பலி

சேலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி பலி. போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 62). இவர், தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை 5 மணி அளவில் வரகம்பாடி பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த 7-வது மைல் அருகில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிரே சேலம் நோக்கி வந்த அரசு பஸ், சந்திரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் விமல்ராஜிடம் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story