கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

பைல் படம்

கோவில்பட்டியில் உறவினா் திதி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கே. வெங்கடேஸ்வர புரத்தைச் சோ்ந்த நல்லையா மகன் சங்கரப்பன் (55). விவசாயியான இவா் நேற்று கோவில்பட்டி மேற்கு பூங்கா சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிணற்று அருகே நடைபெற்ற உறவினா் திதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் கிணற்று சுற்றுச்சுவா் மீது அமா்ந்திருந்தாராம்.

அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சங்கரப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story