கொலை வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது

கொலை வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது

ஊராட்சி மன்ற தலைவர் கைது

ராசிபுரம் அருகே விவசாயக் கூலி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (48). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுப்பத்தான் புதூர் பகுதியில் கத்தியால் குத்தி செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் உயிரிழந்தவரின் மனைவி செல்வி, நெத்திமேடு பகுதியை சேர்ந்த ரவி ஆகியோருக்கு தொடர்பு இருந்த நிலையில் இருவரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நெ.3, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் கந்தசாமி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை எடுத்து தலை மறைவாக இருந்த அவரை ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்

Tags

Next Story