லாரி மோதி விவசாயி உயிரிழப்பு. போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் லாரி மோதி விவசாயி உயிரிழந்த நிலையில் போலீஸ் விசாசரணை நடக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளி ராஜ் (33). திருமணம் ஆகாத காளிராஜ் விவசாயி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோவில் வாசல் பின்புறம் உள்ள சுரண்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே காளிராஜ் பரிதாபமாக உயர்ந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் காளிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story