மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி !

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி !

விவசாயி பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி. போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). விவசாயியான இவர் மொபட்டில் மயிலத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். நெல்லித் தோப்பு அருகே வந்தபோது எதிரே கள்ளக் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராமமூர்த்தியின் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story