வீரகனூர் அருகே டூவீலர் விபத்தில் விவசாயி பலி !

வீரகனூர் அருகே டூவீலர் விபத்தில் விவசாயி பலி !

காவல் துறை

வீரகனூர் அருகே டூவீலர் விபத்தில் விவசாயி பலி - போலிசார் விசாரணை
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி மேற்கு காட் டுக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்த விவசாயி (52). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளாகசுந்தரம் தனியாக வசித்து வந்தார். இவரது அக்கா சத்துணவு அமைப்பாளராக இருந்து ஓய்வு பெற்றதை யொட்டி யொட்டி, பணி நிறைவு விழா ஆறகளூரில் நடை பெற்றது. இதில் பங்கேற்று விட்டு, நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சுந்தரம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வேப்பம்பூண்டிபகுதியில் ஓடை கரை பக்கமாக வந்தபோது, வண்டியில் இருந்து நிலைதடு மாறிரோட்டில் விழுந்து. படுகாயமடைந்த சுந்தரம். ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.நேற்று அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், வீரகனூர் போலீசார் சம்பவ இடம் வந்து, சுந்தரம் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மகன் கபிலேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story