தேர்தலில் போட்டியிட விவசாய அணி அமைப்பாளர் மனு

தேர்தலில் போட்டியிட விவசாய அணி அமைப்பாளர் மனு
விருப்ப மனு அளித்த போது
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட திருநெல்வேலி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன் விருப்பமனு தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் தலைமை கழகத்தின் மனு அளிக்கலாம் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று (மார்ச் 2) திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட திருநெல்வேலி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன் நேற்று திமுக நிர்வாகிகளிடம் மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story