பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெற்பயிர்கள் 

பிசான பருவ சாகுபடிக்காக பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருநெல்வேலியில் பெய்த கனமழையால் பாளையங்கால்வாயில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் குடியிருப்பு பகுதியில் இருந்து பெருக்கெடுத்த மழைநீரும் சேர்ந்து சாலைகளில் ஓடியது. இதனை தொடர்ந்து பாசன நீர் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்பொழுது பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலமுன்னீர்பள்ளம், கீழமுன்னீர்பள்ளம், கருங்குளம், மேலநத்தம், மூளிகுளம் பகுதியில் பாளையங்கால்வாயில் இருந்து மடைகள் மூலம் நேரடியாக பாசனம் பெறும் வயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பாளையங்கால்வாயில் தண்ணீரை திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



Tags

Next Story