மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் 13359 ரூபாய் வரை விலை கிடைப்பதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் 13359 ரூபாய் வரை விலை கிடைப்பதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருக்கும்..ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விலை விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் 1388 மஞ்சள் முட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் 346 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் 8655 ரூபாய் முதல் 13359 ரூபாய் வரையிலும் , கிழங்கு 7769 ரூபாய் முதல் 12099 ரூபாய் வரையிலும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story