மழை நீரில் மூழ்கிய நெல் கதிர்களால் விவசாயிகள் வேதனை!

மழை நீரில் மூழ்கிய நெல் கதிர்களால் விவசாயிகள் வேதனை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் காலம் தவறி பெய்த மழையால் நெல்கதிர்கள் சாய்ததோடு நெல் மணிகள் கதிரிலேயே முளைக்கத் தொடங்கியது.இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் .இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குனர் ரகுமத்நிஷா, ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய்துறையிலிருந்து அடங்கல் வாங்குவதற்கும் நிவாரணம் பெறுவதற்கும் விவசாயிகளுக்கு உதவுவதாக வேளாண்‌ உதவி இயக்குனர் ரகுமத்நிஷா தெரிவித்தார்.

Tags

Next Story