மா விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

மா விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

பைல் படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா வகைகள் ஆயிரக்கணக் கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நத்தம், சாணார்பட்டியிலும் அதிக அளவில் மா விவசாயம் நடைபெறுகிறது. இங்கிருந்து மாம்பழம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஜூலை வரை மாம்பழ சீசன் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மழையின்மை, கடும் வறட்சி மற்றும் பூக்கும் பருவம் தாமதமானதால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேன் பூச்சி தாக்குதலால் மாம்பூக்கள் கருகி உதிர்ந்து விட்டன. தற்போது சீசன் தொடங்கிய நிலையிலும் பழநி, நத்தம் பகுதியில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை.

Tags

Next Story