தனியார் காற்றாலை நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்

தனியார் காற்றாலை நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்

விவசாயிகள் கைது

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போது மயங்கி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளை டிஎஸ்பி தகாத வார்த்தையால் திட்டியதால் எரிச்சல் அடைந்தனர். இந்நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை கடந்த வாரம் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில் இன்று போலிஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்களை அமைக்க முயன்றபோது அதை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலிசார் குண்டுக்கட்டாக கைது செய்யதனர்.

Tags

Next Story