பருத்தி விளைவித்து பயனடையும் விவசாயிகள்

பருத்தி விளைவித்து பயனடையும் விவசாயிகள்

பைல் படம்

திண்டுக்கல் அருகே பருத்தி விளைவித்து பயனடையும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் அருகே பருத்தி விளைவித்து பயனடையும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.திண்டுக்கல்லை அடுத்த ஒத்தக்கடை ராஜகபட்டி சிலுவத்தூர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கரிசல்பூமி அதிகளவில் உள்ளது. இதனால் பருவ மழை பெய்த பின்பு அப்பகுதி விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.கடந்த 2 மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் ஈரப்பதத்துடன் நிலம் உள்ளது.ஆகவே ஒவ்வொரு செடிகளுக்கும் உரம் வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story