மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்

போதிய தண்ணீர் இல்லாததால், 1300 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், இழப்பீடு கோரி விவசாயிகள் பலரும் மனுக்களை அளித்தனா். திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு முப்பதாயிரம் இழப்பீடுவழங்க கோரி திருச்சி கலெக்டரிடம் இன்று காய்ந்த மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்தனர்.

Tags

Next Story