விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்கலாம்: அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்கலாம்: அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம்
அஞ்சல் துறை சார்பில் வங்கிக் கணக்கு துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ரகு ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்பட உள்ள தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்,

தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 1.3 லட்சம் விவசாயிகளிடம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லை என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒருசில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்" இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story