மழை பாதிப்பால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்குமாறு வௌவால்தொத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, புதூர் ஒன்றியம்,வெளவால் தொத்தி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானாவாரி நிலத்தில் உளுந்து, பாசி, சோளம், மல்லி, கம்பு, பருத்தி, சூரியகாந்தி போன்ற பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். பலத்த மழை காரணமாக அறுவடைக்கு காத்து இருந்த அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி, கடல் போல காட்சி அளிக்கின்றது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசாங்கமும், வேளாண்மை உயர் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வௌவால் தொத்தி, புதுப்பட்டி, ரெகுராமபுரம் விவசாய மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வௌவால் தொத்தி கிராம பஞ்சாயத்து விவசாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story