நெற்களம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.

நெற்களம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.
புதர் மண்டியுள்ள நெற்களம் 
நெற்களத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இங்கு 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் மூன்று போகம் பயிர் செய்யும் விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில், அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க கதிரடிக்கும் களம் ஆற்காடுகுப்பம் செல்லும் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நெற்கள கடந்த ஓராண்டாக பராமரிக்காததால், இவை புதர் மண்டி ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது.

களத்தின் பல பகுதிகளில் சிமென்ட் காரை பெயர்ந்து உள்ளது. இதனால், அறுவடை செய்த நெற்கதிர்களில் இருந்து, தானியங்களை பிரிக்க, போதிய வசதி இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். கதிரடிக்கும் களத்தை சீரமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story