கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

கரும்பு சாகுபடி

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் அறுவடைக்கு தயாரான கரும்புகளை அணில்,முயல்கள் சேதப்படுத்துவதால் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கமடைந்தனர்.திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சுற்றுப்பகுதிகளில் பொங்கல் நேரத்தில் அறுவடை செய்வதற்காக கரும்புகள் அதிகளவில் பயரிடப்படுகிறது.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் கரும்பு விவசாயிகள் நல்ல விலைக்கு விற்க வேண்டி கரும்புகளை வளர்த்து வந்தனர்.கரும்புகள் நல்ல முறையில் வளர்ந்த நிலையில் முயல்கள்,அணில்கள் கரும்புகளை கடித்து சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை விரட்டுவதற்காக எந்நேரமும் விவசாயிகள் தங்கள் வயல்களிலே தங்குகின்றனர்.

Tags

Next Story